Thursday, January 3, 2008

அளவற்ற அருளானலும், நிகரற்ற அன்புடையுனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.



எனது ப்ளாக் பக்கம் வருகை தரும் உங்களுக்கு, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!


உலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது, நல்லவைகள் ஒரு புறம் போராடி போராடி வளர்கின்றன. கெட்டவைகள் எதேச்சையாக, சாதாரணமாக மிகவும் விரைவாக வளர்கின்றன. மனிதர்களுக்கு எது சரி? அல்லது எது தவறு? என்று வித்தியாசம் காணகூட தெரியாமல், தவறுகளை சரி என்றும், சரியானவைகளை தவறு என்றும் தீர்ப்பு சொல்லுகிற நிலையிலேயே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் தனது மனங்களை சமாதானம் செய்துகொண்டு தவறை தவறு என்று தெரிந்தாலும், இதுதான் சரி என்று ஒரு போலி பதிலையும் தங்கள் மனிதிற்கு தருகிறார்கள். இதனால் பலர் வாழ்வில் நிம்மதி இழக்கின்றனர்.
இவை எல்லாம் ஏன்? எதற்காக?


இதை எல்லாம் பற்றி விளக்கவும், எது வாழ்க்கைக்கு சிறந்த வழி, எதனை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்பது என்ன? என்பதனையும் பற்றி சொல்லவே எனது ப்ளாக்கை திறந்து இருக்கின்றேன்.

எல்லாம் வல்ல இறைவன் இதற்கு துணை புரிவான் என்று நம்பிக்கை கொண்டு எனது எழுத்தை தொடங்குகிறேன். உங்களின் ஆதரவையும் என்றும் எதிர் பார்க்கிறேன்.

நட்புடன்
மீரான்