Wednesday, January 9, 2008

கடவுள் நம்பிக்கை (2)

இறைவனை நம்புவதனால் என்ன என்ன நன்மைகள்?

நமக்கு மேலே ஒருவர் இருக்கிறார். அவர்தான் சூப்பர் பவர். அவர் நம்மை எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருக்கிறார் என்று நம்பிக்கை கொள்வோம். அப்படி நாம் நம்பிக்கை கொள்ளும்போதுநமது மனசு தவறான ஒன்றை நினைத்தாலும்கூட, செயல் அளவில் இறங்கி அந்த தவறை செய்துவிட மாட்டோம்.உண்மையான கடவுளுக்கு பயம் கொள்ளுவோம். இதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்களின் நிலை.

குறைவான அல்லது குறையான கடவுள் நம்பிக்கையாளர்களின் நிலை :

என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், கடவுளை பற்றிய குறைவான நம்பிக்கை கொண்டவர்களும் கிட்டதட்ட இருவரும் சமமே. கடவுள் நம்பிக்கையை நமக்கு எது சொல்லி தருகிறது? நமது சிந்தனை என்ற மனம் அல்லது மனம் என்ற சிந்தனை, இதுதான் நமது கேள்விகளுக்கு அல்லதுசிந்தனைகளுக்கு விடை தருவதாக அல்லது தீர்வு தருவதாக இருக்கிறது.

ஒரு மனிதன் இருக்கிறான். அவனுக்கு கடவுளை பற்றி ஏதும் தெரியவில்லை அல்லது தெரிந்து கொள்ளவும்அவன் விரும்புவது இல்லை. அவனுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? இதோ எனதுசிந்தனையில் தோன்றும் கடவுள் மறுப்பாளனின் செயல்களை பற்றி ஆராய்ந்து எழுதுகிறேன்.
அந்த மனிதன் முதலில் குழந்தையாக பிறக்கிறான். பிறகு சற்று வளர்ந்த பின்னால், எல்லோரும் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்கிறார்கள் என்பதற்காக, அந்த குழந்தையையும் அவனின் பெற்றோர்கள்பள்ளியில் சென்று சேர்க்கிறார்கள், அந்த காலத்தில் தமிழ் சார்ந்த பள்ளி. இன்று பெரும்பாலும் ஆங்கில பள்ளி என்றே வைத்து கொள்வோம்.

பள்ளிக்கு போகும் வாகன ஓட்டுனரிலிருந்து பள்ளியில் காவல் இருக்கும் (வாட்ச் மேன்), தனது பெற்றோர் அல்லது உறவினர்கள் எல்லோரும் புகை பிடிக்கும் ஒரு பழகத்தில் இருக்கிறார்கள். இன்றைய நிலைமை திரும்பும் இடமெல்லாம் கையில் புகை வைத்திருப்பதுதான் இன்றைக்கு உள்ள நடைமுறை (பேஷன்). அதை அந்தசிறுவன் பார்க்கிறான். நாமும் அதை புகைத்து பார்த்தால் என்னவென்று சற்று சிந்திக்கிறான். அதை கடையில்சென்று வாங்கி புகைக்க தெரியாது அந்த வயதில். முதலில் யாராவது புகைத்து போட்ட ஒரு துண்டு பீடி அல்லது சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பிக்கிறான். மறைவிடமாக சென்றுதான் போய் புகைப்பான், யாராவது பார்த்தால் அடிப்பார்களோ அல்லது பிடுங்கி கொள்வார்களோ என்ற அச்சமும் இருக்கலாம். ஒரு வழியாக யாரோ புகைத்துவிட்டு போட்ட சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்து புகைத்தும் விட்டான்.

தான் புகைத்துவிட்ட செய்தியை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறான். மற்றவர்களையும் அதைபுகைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். நண்பர்களின் ஒருவன், தனது தந்தையின் சட்டை பையிலிருந்துஓரீரு சிகரெட்களை எடுத்து வந்து எல்லோருமாக புகைக்கிறார்கள். இப்படியாக அவன் / அவர்கள் வளர்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே, மது அருந்த கற்று கொள்ளும் இவர்கள், பள்ளியில் படிக்கும்சக தோழிகளை தவறான எண்ணங்களில் பார்ப்பதும், செய்கையில் ஈடுபடுவதும் (இன்றைய சினிமா சுலபமாக கற்று தருகிறது) ஏன் ஆசிரியையும்கூட வக்கிர கண்ணோட்டத்தில் பார்ப்பதுமான நிகழ்வும் இவர்களது வாழ்க்கையில் துவங்கி விடுகிறது.

பத்தாம் வகுப்பு தாண்டிய நிலையில் மது, மாது என்று எல்லாம் பழக்கத்திற்கும் மற்றும் குடி மட்டுமில்லாமல் போதை பழக்கத்திலும் அடிமையாகும் எத்தனையோ மாணவர்களும் இவ் உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பதும் ஒருவித அதிர்ச்சியான உண்மைகள்.

இதுபோன்று வளரும் மாணவர்கள் அல்லது மனிதர்களின் உடலில் இதுவரை இல்லாத அத்தனை நோய்களும்தொற்றி கொள்ளும், இளம் வயதில் மரணம், விபத்தில்கூட மரணம் (குடிபோதையில் வாகனம் ஓட்டி), தற்கொலை சாவு, திருமணத்தை தவிர்த்தல், குற்ற உணர்வு, ஆண்மை குறைவு, குழந்தை பாக்கியம் இல்லாமை என்று சொல்லி கொண்டே போகலாம்.

இது போன்ற ஆட்களை மூளை சலவை செய்தால் எந்த ஒரு ரவுடியாகவும், கொலைகாரனாகவும் இன்னும்தீவிரவாதியாகவும் மிகவும் சுலபமாக ஆகிவிடுவார்கள், ஆகி இருக்கிறார்கள். இது எனது சிந்தனையில்தோன்றிய பாடங்கள்.

(தொடரும்)